Friday, July 9, 2010

எஸ்க்கியூஸ் மீ... எனக்கு ஒரு டவுட்...

வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கிற இந்த சமயம் டி..வி.டி மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் தினமும் 2 தமிழ் சினிமா பார்க்கிறேன். (1970-யில வந்த படம் தொடங்கி டப்பிங் படங்களும் அதில் அடக்கம்). அதன் விளைவே இந்த பதிவு.

டவுட் நெ 1:
                          நாலஞ்சு பொண்ணுங்க மொத்தமா நடந்து வரும் போது,  பளீர்-ன்னு காட்டற ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோ லவ் பண்ண ஆரம்பிக்கிறாரே?  அப்புறம் ஹீரோ போற காபி ஷாப், பஸ் ஸ்டாண்ட்-ன்னு எல்லா இடத்திலேயேயும் அந்த பொண்ணும் இருக்கே அது எப்படி?

அதே மாதிரி நிஜத்தில் யாருக்கேனும் லவ் வந்திருக்கா?

டவுட் நெ 2:
                          மலை உச்சியில் இருந்து தண்ணிக்குள்ள குதிக்கும் போதோ (நீச்சல் தெரியாட்டியும்),  அடுக்கு மாடியில் இருந்து ஓடற லாரி மேல குதிக்கிறப்பவும்  ஹீரோவுக்கு ஒன்னுமே ஆகறதில்லை.

ஆனா மாடியில் இருந்து படிக்கட்டில் உருண்டு விழற அம்மா கேரக்டரும், மனைவி கேரக்டரும் ஸ்பாட்டிலேயே செத்து போறாங்களே அது எப்படி?

டவுட் நெ 3:
                   ஹீரோ-வோட காதலியையோ, குடும்பத்தையோ கடத்தி வெச்சுக்கிட்டு வில்லன் மட்டும் மிரட்டறாரே?

வில்லனோட குடும்பத்தை கடத்தி வெச்சிக்கிட்டு ஏன் ஹீரோ மிரட்ட கூடாது?

டவுட் நெ 4:
                        ஹீரோவோ, வில்லனோ நினைச்சவுடனே பிளைட் புடிச்சு அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ கிளம்பி போறாங்களே?

அவங்களுக்கு மட்டும் எப்படி உடனே டிக்கெட் கிடைக்குது? விசா இல்லாம எப்படி போறாங்க? அதுவும் இல்லாம விசிட்டர் விசாவா இருந்தால் கூட அப்பிளை பண்ணி ரெண்டு வாரமாவது ஆகணுமே?

(நமக்கு ஏற்காடு எக்ஸிப்ரஸில் ஊருக்கு போக டிக்கெட் எடுக்கவே ஒரு மாசத்துக்கு முன்னாடி புக் பண்ண வேண்டியிருக்கு?)

டவுட் நெ 5:

ஹீரோயினை கடத்திக்கிட்டு வர்ற வில்லன், இப்பவே நமக்கு கல்யாணம்-ன்னு சொல்லி தயாராக சொல்லறார். ஹீரோயினும் புடவை கட்டிக்கிட்டு வராங்க? எப்படி அவங்களுக்கு புடவையெல்லாம் எடுத்து பிளவுஸ் தைச்சு ஏற்கனவே வைச்சிருப்பாங்களா?

சரி வில்லனை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லாத ஹீரோயின் ஏன் நகையெல்லாம் போட்டு தலை நிறைய பூ வைச்சு, புல் மேக்கப்போட வராங்க?


டவுட் நெ 6:
ஹீரோ ஓங்கி ஒரு அடி அடிக்கும் போதே வில்லனோட அடியாள் கீழே விழுந்தடறார்.
ஆனா வில்லன் துப்பாக்கியால சுட்டு மயங்கி விழுந்த பிறகும், எந்திரிச்சு ஹீரோ சண்டை போடறாரே அது எப்படி?

டவுட் நெ 7:

அதெப்படி ஊருக்குள்ள ஆயிரம் பேர் இருந்தும் வில்லன் பண்ற அநியாயங்களை ஹீரோ மட்டும் கண்டுபிடிக்கிறார்?

(அவருக்கு கவர்மெண்ட்-ல ஒரு வேலை போட்டு குடுத்தா, நடக்கிற எல்லா ஊழல்களையும் கண்டுபிடிச்சிடுவாரே.. யாராவது எம்பிளாய்மெண்ட் ஆபீசில் சொல்லுங்களேன்.)

டவுட் நெ 8:

கோமா ஸ்டேஜில் இருக்கற ஹீரோ, அத்தனை தடவை டாக்டர் முயற்சி செஞ்சும் கண்விழிக்காம, எப்படி ஹீரோயின் விடற கண்ணீர், மேல படும் போது மட்டும் எந்திரிக்கிறார்?

நடக்கவே முடியாம படுத்திருந்தவரால எப்படி, உடனே ஆக்ரோஷமா கத்தி வில்லனை அடிக்க முடியுது?


டவுட் நெ 9:

வில்லனோட அடியாட்கள், மொத்தமா பத்து பேர், பன்னிரெண்டு பேர் ரோட்டில அரிவாளோட சுத்தறாங்களே? அது மாதிரி நிஜ வாழ்க்கையில் யாராவது தெருவில் அரிவாளோட போறாங்களா?

டவுட் நெ 10:

எல்லா ஹீரோவும் ரயிலேறி சென்னைக்கு வராங்களே அது எந்த நம்பிக்கையில?  அப்படி வந்தபிறகும் ஒரு வேலையும் இல்லாம, செல்போன், பைக்-ன்னு எப்படி அவங்களால சுத்த முடியுது?  அட்லீஸ் ஹீரோயினுக்கு வாங்கித் தர ஐஸ்கீரிம் காசுக்கு என்ன பண்ணுவாங்க?

பின்குறிப்பு: இதெல்லாம் சினிமா பார்க்கற எல்.கே.ஜி பிள்ளை கேட்க வேண்டிய கேள்வி? நானும் அந்த வயசிலேயே இருக்கறதாலதான் இது மாதிரி சந்தேகம் வருது.. உங்க அறிவுக்கும் திறமைக்கும் இன்னும் பல டவுட்ஸ் வரும் மக்கா..