முதன் முறை வட்சலா மேடத்தைப் பார்த்ததுமே, இனி எனக்கு ஜெயம்-தான் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. ஆமாம், பிரபல தமிழ் பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்து மாதம் இரண்டாகப் போகிறது. ஆனால் உருப்படியாக இன்னும் ஒரு பேட்டியையும் எடுத்த மாதிரி இல்லை. எடிட்டரிடம் பேச்சு வாங்கியதுதான் மிச்சம். நானும் முயற்சிக்காமல் இல்லை. இட்லி கடை நடத்துகிற பாட்டியில் ஆரம்பித்து இன்போஸிஸ் கம்பெனியின் தலைவர் வரை எல்லோரையும் பேட்டி எடுக்க முயற்சி செய்தாகிவிட்டது. சினிமாக்காரர்களை பேட்டி எடுக்க முயற்சித்ததில் ’புது ஆள், உனக்கு என்ன தெரியும்’ என தட்டிக் கழித்தனர்.
திறமைசாலிகளைத் தேடிச் சென்றால் அவர்களுக்கு பத்திரிக்கைக்கு தகுந்தமாதிரி பேசத் தெரிவதில்லை. நாமாக கேள்வி கேட்டாலும் வாய் பொத்தி சிரிக்கிறார்கள். அதைத் தாண்டி பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றிய செய்தியோ, கட்டுரையோ வர வேண்டும் என நினைப்பவர்களிடம் விஷயம் இல்லை. முகஸ்துதி பாடும் விளம்பரமாகவே இருக்கிறது அவர்கள் பேச்சு. திக்கிக் திணறி இதையெல்லாம் கட்டுரையாக எழுதித் தந்தால் `ஜீவனில்லை` என துரத்தி அடிக்கிறார் சப் எடிட்டர்.
இன்னும் ஒரு வாரம் அவகாசம். அதற்குள் உருப்படியாய் ஒரு பேட்டி எழுதித் தந்து வேலையை தக்க வைத்துக் கொள்கிற வழியைப் பார் என அலுவலகத்தில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்ட மூன்றாவது நாளில் தான் வட்சலா மேடத்தை சந்தித்தேன். ஓவியர், சமூக சேவகி, கலை இலக்கிய வாதி என ஏகப்பட்ட பட்டங்களை சுமந்து கொண்டிருந்தவரிடம் என்னை அறிமுகப்படித்திக் கொண்டவுடன் முகம் மலர வரவேற்றார். தன்னைப் பற்றி அதிக விவரங்களை அடக்கத்துடன் தந்தவர் நிச்சயம் என் வேலையை காப்பாற்றி விடுவார் என நினைத்தேன்.
வட்சலா மேடம் சாதாரண மனுஷி இல்லை என அன்றே புரிந்து போனது. ஓவியங்களில் மிக கடினமானதும், திறமையானதுமான தஞ்சாவூர் ஓவிய பாணியில் கடவுள் உருவங்கள் வரைவதை மட்டுமே அவர் லட்சியமாக கொண்டிருந்தார், இலக்கியத்தில் இலக்கணங்களை கரைத்து குடித்தவராக இருந்தார். படிக்க முடியாத ஏழை மாணவர்களுக்கு பணம் தந்து உதவி செய்தல், ரக்ஷா பந்தன் (சகோதரன் நலமாக இருக்க வேண்டும் என அவரின் சகோதிரிமார்கள் கடவுளை பிரார்த்தனை செய்து, கையில் ராக்கி என்னும் கயிறு கட்டி விடுவார்கள்) அன்று இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ராக்கி கயிறு வாங்கி அனுப்பி வைப்பார். முதியோர் இல்லங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பி வைப்பார். தவிர சமூக நல அமைப்பு ஒன்றில் சென்னை வட பகுதிக்கு தலைவியாக இருந்தார். அவரின் பிள்ளைகள் இருவரும் அமெரிக்க வாசிகள். மூத்தவர் அங்கு வேலை பார்க்க, இளையவரோ படித்துக் கொண்டிருந்தார். வட்சலா மேடத்தின் கணவர் சென்னையில் உள்ள பிரபல தொழிலதிபர்.
அறிந்த விசயங்களை அழகான தமிழில் கோர்வையாய் எழுதிக் கொடுக்க, அது அடுத்த வார பத்திரிக்கையில் மூன்று பக்க கட்டுரையாக பெரிய புகைப் படத்துடன் வந்திருந்தது. அன்றே பத்திரிக்கையை தூக்கிக் கொண்டு டூவீலரில் அவரின் வீட்டிற்கு விரைந்தேன். மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்று பலகாரங்கள் தந்து உபசரித்தார். இதுவரை செய்தித்தாள்களில் ஓரிரு வரிகளில் அவரைப் பற்றி செய்தி வந்திருக்கிறதாம். முழுதாய் மூன்று பக்க அளவில் அதுவும் பிரபல பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வந்தது இதுவே முதல் தடவை என்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் என்பது அவரது வார்த்தைகளில் தெரிந்தது. இனி நாம் இருவரும் நண்பர்கள், அடிக்கடி என் வீட்டிற்கு வர வேண்டும் என அவர் சொல்லும் போது `நடக்கிற விசயமா` என்றாலும் விரைவில் 52 வயதான வட்சலா மேடமும் 21 வயதான நந்தினி ஆகிய நானும் நண்பர்கள் ஆனோம்.
அந்த மாதக் கடைசில் நான் தங்கியிந்த மகளீர் விடுதியில் இருந்து மாற வேண்டிய சூழ்நிலை. ஏனோ விதி அவங்க இருக்கும் அதே ஏரியாவுக்கே என்னையும் இடம் மாற்றியது. அதிகாலை வாக்கிங் நேரத்தில் இருவரும் `ஹாய்` சொல்லிக் கொள்வோம். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதிய உணவுக்கு என்னை அழைத்தார். சென்னையில் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கியிருந்த எனக்கு அன்று அமிர்தமாக உணவு ருசித்தது. வீட்டில் பிள்ளைகள் யாரும் இல்லாததால் எனக்கு அடிக்கடி போன் செய்து பேசுவார். நானும் வேலை இல்லாத சமயங்களில் அங்குதான் இருப்பேன். ஊரில் இருக்கும் அம்மாவுக்கும் வட்சலா மேடத்தைப் பத்தி சொல்லி போனிலும் பேச வைத்தேன். வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் என்னை சுருக்கமாக `நந்து` என அழைக்க இவர் மட்டும் ஸ்பெஷலாக `நதி` என அழைப்பார். அந்த வார்த்தை உச்சரிப்பு மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்க இன்னும் அவரை எனக்கு பிடித்துப் போனது.
இருவரும் சேர்ந்து கபாலிஸ்வரர் கோயில், தீ நகர் ஷாப்பிங், அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லம் என சுத்தாத இடம் இல்லை. அவங்க வீட்டில் ரெண்டு கார் இருந்தும் என் டூவிலரில் வெளியே செல்வது என்றால் கொள்ளை விருப்பம் அவருக்கு. இந்த இரண்டு மாத பழக்கத்தில் ஒரு நாள், `நீ ஏன் என்னை மேடம்-ன்னு கூப்பிடற. அம்மா-ன்னு கூப்பிடலாமே`ன்னு வாய்விட்டே கேட்க மிகுந்த தயக்கத்திற்கு பிறகு வட்சலாம்மா என அழைக்க ஆரம்பித்தேன்.
ஒரு மாலை நேர மழை காலத்தில் பால்கனியில் அமர்ந்தபடி இருவரும் வெங்காய பக்கோடாவும் காப்பியும் சாப்பிட்டபடி கதையடித்துக் கொண்டிருந்தபோதுதான் மனதில் இருந்த அந்த ஆசையைச் சொன்னார். `நதி... எனக்கு ரொம்ப வருஷமா ஒரு ஆசை. பெண் குழந்தை வேணும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா பிறந்தது ரெண்டும் பசங்க. அவங்க வளர்ந்து படிப்பு, வேலைன்னு பிஸியாகிட்டாங்க. அப்பத்தான் பெண் குழந்தை இல்லாத ஏக்கம் என்னை வாட்டி எடுத்தது. ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்க்கனும்ன்னு இப்ப வரைக்கும் நினைக்கிறேன். ஆனா இந்த வயசுல ஒரு கைக்குழந்தைக்கு அம்மா-ங்கிறதை சமூகம் எப்படி ஏத்துக்கும்ங்கிற தயக்கம் இருக்கு. அதையும் தாண்டி அந்த குழந்தை வளர வரைக்கும் நான் திடமா இருப்பேன்னான்னு தெரியலை` என்று அவர் சொல்லும் போது கண் கலங்கியிருந்தது. அவர் பேச்சில் எப்போதும் பெண்கள் பற்றிய உயர்வாக கருத்து இருக்கும். ஆண்களை நம்பாமல் சொந்த காலில் நிற்க வேண்டும், எந்த காலத்திற்கும் பெண் தளர்ந்து போகக் கூடாது என சொல்லிக் கொண்டே இருப்பார்.
அதுவரை எனக்கு பிடித்த வட்சலா மேடம், என்னுடைய ரோல் மாடலானார். அந்தஸ்து பார்க்காமல் பழகும் அவரின் பண்பு எனக்கு இன்னும் இன்னும் பிடித்துக் கொண்டே போனது. தீபாவளி சமயம் எனக்கு ஒரு சுடிதார் எடுத்து தந்தார். வறுமையின் நிழலில் வளர்ந்திருந்த நான் அந்த சுடிதாரின் விலையைப் பார்த்ததும் பிரமித்துப் போனேன். கொஞ்ச நாளில் எனக்காக நிஜமாகவே அம்மா ஸ்தானத்தில் இருந்து கல்யாணத்துக்கும் வரன் பார்க்க ஆரம்பித்தார்.
ஆனால் அவருடன் பழகிய அந்த ஏழு மாத காலத்தில் நான் எந்த உதவியும் அவரிடம் எதிர்பார்த்து நின்றது இல்லை. ஒரு முறை தன் கணவரின் அலுவலகத்திலேயே நல்ல பதவி வாங்கித் தருகிறேன் என்றும் சொன்னார். அவர் குறிப்பிட்ட சம்பளம் நான் இப்போது வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் இரண்டரை மடங்கு இருந்தும் ஏனோ ஒப்புக் கொள்ள தோன்றவில்லை. என் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் கூட கேலி செய்வார்கள். `ஏன் நந்து.. பெரிய வி.ஐ.பி-யை கைக்குள் வைச்சிருக்க.அப்படியே செட்டில் ஆகிடு` என்று அக்கறையாய் அட்வைஸ் செய்தாலும், எனக்கு ஏனோ அவரிடம் உதவி கேட்க மட்டும் இஷ்டமில்லை. கேட்க கூடாது என கொள்கையாகவே வைத்திருந்தேன்.
ஆனால் அடுத்த வாரமே அவரிடம் கையேந்தும் நிலை வருமென எதிர்பார்க்கவில்லை. நான் தங்கியிருக்கும் விடுதியின் வேலைக்காரம்மா சாலை விபத்தில் ஒரு காலையும் ஒரு கையையும் இழந்து விட்டார். கணவரும் இல்லாத நிலையில் அந்தம்மா மற்றும் அவரின் மகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதானது. ஆதரவற்று நின்றவர்களை எங்கள் விடுதி நிர்வாகம் அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதித்தது. ஆனால் அந்த இளம் பெண்ணின் படிப்புக்கு உதவ முடியாது என்று கைவிரித்து விட்டது. வேலைக்காரம்மாவுக்கு தான் ஊனமானதை விட, மகளை படிக்க வைக்காமல் போன நிலை குறித்து மிக்க வருத்தம். எதோ என் வருமானத்திற்கு அந்த பெண்ணுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தர முடியும். ஆனால் பள்ளிக் கட்டணம் கட்டி முழு செலவையும் ஏற்க முடியாத நிலையில் வேறு வழியின்றி வட்சலா மேடத்தை சரண் அடைந்தேன்.
’நதி, நீ செய்ய நினைக்கிறது நல்ல விசயம்தான். மனமார உன்னை பாராட்டறேன். ஆனா ஒரு பெண் குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட எனக்கு இஷ்டம் இல்லை. ஆண் புள்ளைன்னா படிச்சு சம்பாரிச்சு குடும்பத்தை காப்பாத்துவாங்க. பெண் புள்ளைங்க அப்படி இல்லையே? என்னிக்கு இருந்தாலும் கல்யாணம் ஆகிப் போறவங்க தானே. அந்தப் பொண்னு எப்படி ஊனமான தன் அம்மாவை கடைசி வரை வெச்சு காப்பாத்தும் சொல்லு? வேண்ணா நம்ம வீட்டுக்கு வேலைக்கு வரச் சொல்லு. இல்லை நானே நல்ல இடத்தில் வேலை வாங்கித் தரேன்`` என்று அவர் சொல்ல எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
`ஏன் பெண்ணா இருந்தா படிச்சு குடும்பத்தை காப்பாத்த மாட்டாங்களா? எல்லா பசங்களும் பெத்தவங்களை கடைசி வரைக்கும் பார்க்கறாங்களா என்ன? என்ற என் வாதத்துக்கு அவர் தந்த பதில் இன்னும் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.
`இல்லை நதி. பெண்ணுங்களை படிக்க வைக்கிறது வேஸ்ட். சாரிம்மா என்னால அந்த பெண்ணுக்கு உதவி செய்ய முடியாது` என்று அவர் திட்டவட்டமாக சொல்ல வெறுப்பின் உச்சத்தில் `சரி நான் வரேன் மேடம்` என்று சொல்ல அந்த வார்த்தை மாற்றத்தில் கண்கள் சுருக்கி பார்த்தார். அதை பொருட்படுத்தாது நான் விடுவிடுவென வந்து விட்டேன்.
அதன் பின் அவர் வீட்டு வாசலை மிதிக்க எனக்கு இஷ்டமில்லை. என் மனதில் உயர்ந்த இடத்தில் இருந்தவர், சடாரென உடைந்து போனார். சமூக சேவை செய்வதும், பெண்ணியம் பேசுவதும் பணக்காரர்கள் அணிந்து கொள்ளும் முகமூடி என்பது புரிந்து போக, பேச்சிலேயே காரியம் சாதிப்பவர்கள் என அறிந்தேன். அது வரைக்கும் ஒரு சுயநல வாதியிடம் பழகியிருந்தேனே என்ற வருத்தம் இப்போது வரை இருக்கிறது எனக்கு.
பின்குறிப்பு: சொந்த அனுபவத்தில் உருவான இக்கதை ‘முகமூடி மனிதர்கள் என்ற தலைப்பில் ஆம்பல் பத்திரிக்கையில் வந்துள்ளது.. முடிந்தால் அங்கேயும் வந்து பாருங்கள்.
Monday, October 18, 2010
Monday, September 27, 2010
இது பார்த்த கதை
பாரதி ராஜா படம் பார்த்திருக்கிறீர்களா? அது மாதிரி ஒரு அக்மார்க் கிராமத்துப் பெண்-தான் நா ன். ஸ்கூல், காலேஜ் என எல்லாவற்றிலும் நகரத்து வாசனையே அறியாமல் வளர்ந்தேன். அப்படி ஒரு பெண்ணுக்கு சென்னை நகரத்தில் தனிக்குடித்தனம் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? வாரம் ஒரு சினிமா, ஹோட்டல், பீச், பார்க், ஷாப்பிங் என்று சுத்தி சந்தோஷமாய் காலம் கழிக்கலாம். ஆனால் என்னைக் கேட்டாலே அலறுவேன். இந்த நகரமே வேண்டாம் இறைவா.. மறுபடியும் கிராமத்தில் விட்டுவிடு ன்னு கெஞ்சுவேன்.
உடனே நகரத்தின் வேகத்தில் என்னை ஒட்டிக் கொள்ள முடியாமல் கிராமத்து நினைவுகளில் வாடி தனிமையில் தவிக்கிறேன் என எண்ணினால் சாரிங்க..... என் பிரச்சனை வேற. ரீல் இல்லாமயே என் பிளாஸ்பேக்கை சுத்திகாட்டினால்தான் புரியும்.
என் வீட்டுக்காரர் இங்கிருக்கும் தனியார் அலுவலகத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார். நானும் நர்சரி பள்ளி ஒன்றில் டீச்சராய் இருக்கிறேன். சென்னைக்கு வந்து வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு, முதல் நாள் ஸ்கூலுக்கு போகும் போது, மத்த டீச்சரெல்லாம் என்கிட்ட 'தனிக் குடித்தனமா, சொந்த ஊரு என்ன, இங்க உங்க வீடு எங்க-ன்னு' விசாரிச்சாங்க. நானும் அக்கறையா சொல்ல, நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சாங்க. இப்பத்தான் புரியுது அவங்களும் என்னை மாதிரியே கஷ்டப்பட்டிருக்காங்க. அப்படி என்னதான் கஷ்டம்ன்னு கேக்கறீங்களா?
இதோ ஆரம்பிக்கிறேன்.
இங்க வந்து சம்பளம் வாங்கி முதல் வார ஞாயிறு அவுட்டிங் பிளான் போட்டோம். காலையிலேயே கிளம்பி ஈ.சீ.ஆர் ரோடு போறது. லஞ்ச், டின்னர் எல்லாமே அங்கதான். அப்படியே சினிமாவும் பார்த்திட்டு லேட் நைட் வீட்டுக்கு வர்றதுன்னு ஐடியா பண்ணிட்டு தூங்கப் போனா, அடுத்தநாள் காலை ஆறுமணிக்கே காலிங் பெல் கதறியது. கதவை திறந்தால் என் மாமியாரின் தூரத்து சொந்தம் பல்லைக் காட்டிக் கொண்டு நின்றார்கள். 'எம் மவனுக்கு அடையார்-ல இண்டர்வியூ,. மெட்ராஸ் போறோம்ன்னு தெரிஞ்சவுடனே சிவகாமியக்கா (என் மாமியார்தான்) நம்ம வூட்டில்தான் தங்கணும்ன்னு சொல்லிடுச்சு. அதான் முதல் நாளே கிளம்பி வந்திட்டோம்'ன்னு சொல்ல, நானும் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை ஆசையாய் உபசரிச்சேன். காலை டிபன் சாப்பிட்ட கையோடு, 'இன்னேரம் சிவகாமி அக்காவா இருந்தா கோழி அடிச்சு குழம்பு வைச்சிருக்கும்" என்று அவர்கள் சொல்ல மதியமே கோழி வாங்கி குழம்பு வைத்தோம்.
அடுத்த நாள் அவங்களை இண்டர்வியூக்கு கூட்டிப் போக என் கணவர்தான் லீவ் போட்டார். அதற்கு அடுத்த நாள் சென்னையை சுத்திக்காட்ட நான் லீவ். ஒருவாரம் கழிச்சு அவங்க ஊருக்கு கிழம்பும் போது, அடிக்கடி வாங்கன்னு சொன்னது தப்புன்னு இன்னிக்கு வருத்தப்படறேன். பத்து நாள் கழிச்சு என் மாமனார் போன் பண்ணினார். தொகுதி எம்.எல்.ஏவைப் பார்க்க ஊர்க்காரங்க அஞ்சு பேர் வருவாங்க, வீட்டில் தங்க வெச்சு நல்லா கவனிச்சு அனுப்பங்கன்னும் சொன்னார். நாங்களும் நல்லாத்தான் பார்த்து அனுப்பினோம். ஆனால் அதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. (எங்க மாமா ஊரில் கவுன்சிலர் எலக்சனில் நின்னு தோத்துப் போனவர், அதுக்கே அரசியல்வாதி கணக்கா மாசத்துக்கு ஒரு தடவை சட்டசபையில் யாரையாவது பார்க்கணும்ன்னு நாலஞ்சு பேரோட கிளம்பி வந்திருவாங்க) சென்னை வந்த ரெண்டாவது மாசம், எங்க நாத்தனாரோட மச்சான் வேலை தேடி சென்னை வர, என் அண்ணன் வீட்டைத் தவிர வேறேங்கும் போகக் கூடாதுன்னு சொல்லியே அனுப்பியிருக்காங்க நாத்தனார். அவன் கொண்டு வந்த காசு ஐஞ்சே நாளில் கரைய, ஆரம்பிச்சது எங்களுக்கு தலைவலி. சொந்தக்காரனாச்சே, அதுவும் நாத்தனாரோட மச்சான், வேற வழி அவன் ஊர் சுத்த ஆட்டோ காசு குடுத்திட்டு நானும் என் ஹஸ்பெண்டும் பஸ் டிக்கெட்டுக்கே கடன் வாங்க வேண்டிய நிலை. இதை இப்படியே விட்டா சரிவராதுன்னு அவனுக்கு ஒரு வேலை தேடிக் குடுத்தோம். அப்பவும் ஒரு மாசம் தங்கிட்டுத்தான் கிளம்பினான். விட்டது ஏழரைன்னு நினைச்சா அதை விட பெரிய பூதமெல்லாம் வந்தது. பக்கத்து வீடுகளில் பத்து நூறுன்னு கை மாத்து வாங்கியிருக்கான். அவங்கெல்லாம் எங்களை கேக்க, பணம் குடுத்து தீர்த்தோம். இது கூட பரவாயில்லைங்க. ஹவுஸ் ஓனர் பொண்ணுக்கு ரூட் விட்டு ஊர் சுத்திட்டு வேலை கிடைச்சதும் அந்த பொண்ணுக்கிட்ட சொல்லாம கழண்டுக்கிட்டான். விசயம் வீட்டில் தெரிய வர, நாங்க வீடு காலி பண்ண வேண்டிய சூழ்நிலை.
அதற்குப் பிறகு இன்னும் ஏழரை எங்க வீட்டில் ரூம் போட்டு உட்கார்ந்தது. ஆமாங்க கோயம்பேடு பஸ் ஸாண்டுக்கு பக்கத்திலேயே குடி போக, ஊரில் இருந்து சும்மான்னாச்சுக்கும் சென்னை வரவங்க கூட எங்க வீட்டுக்கு வந்து தங்க ஆரம்பிச்சாங்க. வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா சந்தோஷப்படாம இப்படி வருத்தப்படறேன்னு நினைக்கிறீங்களா? என் கேரக்டர்-ல ஒரு வாரம் இருந்து பாருங்க தெரியும்.
பெரிய ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்கணும்ன்னு ஒரு கூட்டம், ஹை கோர்ட்-ல கேஸ் நடத்துபவர்கள், சென்னையில் இண்டர்வீயூ இப்படி வாரம் ஒருமுறை யாராவது எங்க வீட்டில் இருப்பாங்க. எங்க வீட்டிக்கு `மினி ஹோட்டல்` என்று பக்கத்து வீடுகளில் பெயர் வைக்குபடி ஆகிடுச்சு. பின்னே எப்பவும் எங்க. வீடு ஜே ஜே-ன்னு இருக்கும். காலையிலேயும் நைட்டும் விதவிதமா சமைக்கணும். ஞாயிற்றுக் கிழமை லீவுதானேன்னு ரெஸ்ட் எடுக்க நினைக்க முடியாது. காலையில் ஆறு மணிக்கே கதவு தட்டும் சத்தம் கேட்கும் போது பத்திக் கொண்டு வரும். கொடுமை, வீட்டுக்குள்ள தானே இருக்கறோம்ன்னு நைட்டியோ, ஜீன்ஸ் குர்தாவோ போட்டுக்கிட்டு நிக்க முடியாது. அப்புறம் சிவகாமி மருமக சரியில்லைன்னு சொந்தக் காரங்களுக்கு மத்தியில் பேச்சு வந்திடும். (ஒரு முறை நானும் என் கணவரும் சோபாவில் சேர்ந்து உட்கார்ந்திருக்க, அதெப்படி ஆம்பிளைக்கு சமமா உட்காரலாம்ன்னு என் மாமியாரிடம் யாரோ பத்த வைத்திருக்கிறார்கள்).
ஒரு தடவை ஊரில் திருட்டு கேஸில் மாட்டிக் கொண்ட எங்க சொந்தக்காரர் ஒருவர் போலீஸில் இருந்து தப்பிக்க எங்க வீட்டுக்கு ஓடி வர அவரைத் தேடி போலீஸ் வர, அக்கம் பக்கம் பிரச்சனை ஆகி வேறு வீடு, அப்புறம் ஊரை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி வழக்கம் போல எங்க வீட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை தேடி வந்த கும்பல் கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்ய, வீட்டை காலி செய்தோம். இப்படி நாங்கள் அடிக்கடி வீடு மாற்றிக் கொண்டு இருந்தாலும் விருந்தாளிகள் என்ற பெயரில் தொந்தரவுகள் வருவது மட்டும் குறையவில்லை.
சரி, வர்றதுதான் வராங்க, ஒரு போன் பண்ணி சொல்லிட்டு வரலாமே, அதெல்லாம் கிடையாது நேரா பெட்டியோடு வீட்டு வாசலுக்கு வந்திடுவாங்க. (முகவரி உபயம் வேறு யார் என் மாமியாரும் மாமனாரும்தான்). சில பேர் வந்திறங்கிட்டு போன் பண்ணி வந்து கூட்டி போகச் சொல்லுவாங்க. நிக்கிற இடத்தோட அட்ரஸீம் தெளிவா தெரியாது. கண்டுபிடிக்கறதுக்குள் நம்ம தலை உருளும். இன்னும் சில பேர் ஆட்டோ புடிச்சு நேரா வீட்டுக்கு வந்திட்டு, `என்னாம்மா இம்புட்டு காசு கேக்கறான் இந்த ஆட்டோகாரன். நீ பேசி செட்டில் பண்ணு-ன்னு சொல்லிவிட்டு நெடு நெடுன்னு வீட்டுக்குள் போய்டுவாங்க. நாமதான் 200, 300-ன்னு அழணும்.
அப்படியே வந்தாலும் சும்மா-வா இருக்காங்க, படிக்கட்டில் எச்சில் துப்பறது, கிராமத்து பழக்கத்துல பக்கத்து வீடுகள்ல போய் ஊர்கதை கேக்கறதுன்னு எதாவது செய்யப் போய் நாங்க `சாரி` கேக்க வேண்டியிருக்கும். மாசக் கடைசி நேரம் மளிகை கடையில் கடன் சொல்லி சாமான் வாங்க வேண்டியிருக்கும். வந்து செல்பவர்களில் சின்னப் பிள்ளைகள் இருந்தால் ஊருக்குப் போகும் போது காசு தந்து அனுப்ப வேண்டியிருக்கும். சமயத்தில் யாரேனும் எங்களுடன் ஷாப்பிங் வர நேரிட்டால் அவர்கள் வாங்குவதற்கும் பில் கட்ட வேண்டியிருக்கும். இங்க வந்த புதுசில் ஸ்கூல் பசங்களுக்கு டியூசன் எடுத்துக்கிட்டு இருந்தேன். வர்றவங்க நடுஹாலில் உட்கார்ந்து சத்தமா அரட்டை அடிச்சா அந்த புள்ளைங்க எப்படி படிக்கும். மூணே மாசத்தில் டியூசன் வர்றது நின்னிடுச்சு. மாசம் 1500 ரூபாய் வருமானத்திற்கு ஆப்பு. இதில வர்றவங்களுக்காக லீவ் எடுத்தா சம்பளத்தில் கட்.
இதைவிட பர்சனலா ஒரு விசயம் சொல்லட்டுமா, அடிக்கடி ஆட்கள் வர்றதில் என் புருஷன்கிட்ட கூட சரியா பேச முடியறது இல்லை. ஒத்தையா கல்யாணம் ஆகாத இளம் பெண் யாராவது வந்தா அந்த பொண்ணை ஹாலில் தனியா படுக்க வைக்க முடியுமா? அவளுக்கு துணையா பெட்ரூமில் நான் இருக்க, என் புருஷன் ஹாலில் தூங்குவார். ஒருமுறை எண்ட்ரன்ஸ் கோச்சிங்காக வந்த பொண்ணு ஒன்றரை மாசம் எங்க வீட்டில் தங்க, என் புருஷனைப் பார்க்க பாவமா இருந்தது.
என்ன உங்களுக்கே என்னைப் பார்த்தா வருத்தமா இருக்கா? இது சென்னை வாழ்க்கையோட ஒரு பக்கம்தான். இன்னோரு பக்கமும் சொன்னா இன்னும் பீல் பண்ணுவீங்க. ஊரில் இருந்து போன்-ன்னாவே அலற அளவுக்கு எங்க நிலைமை ஆகிப் போயிருச்சு. பின்னே எவனாவது போன் பண்ணி, `அக்கா ஜாவா புக் வாங்கி அனுப்புங்க`ன்னு சொல்லுவான். நானும் பாரீஸ்-ல தேடிப் புடிச்சு வாங்கி அனுப்புவேன். ஊருக்கு போகும் போது அந்த புக் காசு பத்தி வாயே திறக்க மாட்டாங்க. சென்னையில் புடவை கம்மி விலையாமே, குடவுன் தெரு-ல ரெண்டு காட்டன் புடவை எடுத்துவான்னு பக்கத்து வீட்டம்மா சொல்லும். வாங்கிப் போனா கலர் சரியில்லை மாத்தி தாம்பாங்க. அடுத்த முறை ஊருக்கு போகும் போது மாத்திட்டு போனா, இதை விட நல்லதா சைக்கிளில் புடவை விக்கறவன் கொண்டு வருவான்-ன்னு சொல்லுவாங்க. அவன்கிட்டேயே வாங்க வேண்டியது தான பக்கி,-ன்னு கத்த தோணும். இப்படி சயின்ஸ் ரிசர்ச் புக், கவர்மெண்ட் வேலைக்கு அப்பிளிகேஷன், புது மாடல் செல்போன்-ன்னு எதாவது வாங்கிக்கிட்டு போகணும். அதில் பாதிக்கும் பாதி காசு திரும்ப வராது. ஊரில் காது குத்து, கல்யாணம் வைச்சாலும் மறக்காம லீவ் போட்டு போய் வரணும். இல்லாட்டி மெட்ராஸ் போன சிவகாமி புள்ளையும் மருமகளும் நம்மை மதிக்கலைன்னு சொந்தக்காரங்க பேசுவாங்க. அப்புறம் என் மாமியார் சாமியாடாம விடமாட்டாங்க.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இல்ல எங்க வீட்டுக்கு மட்டும்தான் இப்படி தொல்லைகள் இருக்கா? இல்லை கிராமத்தில் இருந்து வந்து சென்னையில் செட்டில் ஆகியிருக்கிற எல்லோரும் இந்த பிரச்சனை இருக்கா? அதை விடுங்க இந்த வாரம் பீரியா சந்தோஷமா வீட்டில் யாரும் இல்லாம நானும் என் புருஷனும் மட்டும் இருக்கோம். அட ஆமாங்க. எங்க தூரத்து சொந்தத்தில் இருந்து சினிமா-ல சேரணும்ன்னு ஒருத்தன் வந்து இருபது நாள் தங்கியிருந்தான். என் மாமனாரோட தங்கச்சி பொண்ணு ஐ.ஏ.எஸ் கோச்சிங்-காக ரெண்டு மாசமா தங்கியிருந்தா.. அவங்க ரெண்டு பேருக்கும் லவ்வாகி ஊரை விட்டு சாரி எங்க வீட்டை விட்டு ஓடிட்டாங்க. நாங்கதான் அதுக்கு உடந்தை-ன்னு ஊரில் எங்க மேல கோபத்தில் இருக்காங்க. `இப்பத்தான் நிம்மதியா இருக்க முடியுதுன்னு என் புருஷனும் சந்தோஷப்படறார். நேத்து ரொம்ப மாசத்துக்கு பிறகு நாங்க ரெண்டு பேர் மட்டும் பீச், சினிமா, அப்படியே ஹோட்டலுக்கும் போனோம். ஊரில் கெட்ட பேரு வந்தாக் கூட பரவாயில்லைங்க. ஞாயிற்றுக் கிழமை ஒன்பது மணி வரைக்கும் தூங்க முடியுதே? அப்பாடி... அது போதும்.. ஹலோ.. இருங்க போன் அடிக்குது.. மறுபடியும் யார் வரப்போறாங்கன்னு தெரியலையே? ஆண்டவா என்னைக் காப்பாத்து..
பின்குறிப்பு: இது நான் சென்னையில் தங்கியிருக்கும் போது- பக்கத்து வீட்டுக்கு அக்காவுக்கு ஏற்பட்ட சம்பவம். அதை அவர் சொல்வது போல எழுதினேன். நிச்சயமாய் நீங்களும் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்து/உணர்ந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..
உடனே நகரத்தின் வேகத்தில் என்னை ஒட்டிக் கொள்ள முடியாமல் கிராமத்து நினைவுகளில் வாடி தனிமையில் தவிக்கிறேன் என எண்ணினால் சாரிங்க..... என் பிரச்சனை வேற. ரீல் இல்லாமயே என் பிளாஸ்பேக்கை சுத்திகாட்டினால்தான் புரியும்.
என் வீட்டுக்காரர் இங்கிருக்கும் தனியார் அலுவலகத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார். நானும் நர்சரி பள்ளி ஒன்றில் டீச்சராய் இருக்கிறேன். சென்னைக்கு வந்து வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு, முதல் நாள் ஸ்கூலுக்கு போகும் போது, மத்த டீச்சரெல்லாம் என்கிட்ட 'தனிக் குடித்தனமா, சொந்த ஊரு என்ன, இங்க உங்க வீடு எங்க-ன்னு' விசாரிச்சாங்க. நானும் அக்கறையா சொல்ல, நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சாங்க. இப்பத்தான் புரியுது அவங்களும் என்னை மாதிரியே கஷ்டப்பட்டிருக்காங்க. அப்படி என்னதான் கஷ்டம்ன்னு கேக்கறீங்களா?
இதோ ஆரம்பிக்கிறேன்.
இங்க வந்து சம்பளம் வாங்கி முதல் வார ஞாயிறு அவுட்டிங் பிளான் போட்டோம். காலையிலேயே கிளம்பி ஈ.சீ.ஆர் ரோடு போறது. லஞ்ச், டின்னர் எல்லாமே அங்கதான். அப்படியே சினிமாவும் பார்த்திட்டு லேட் நைட் வீட்டுக்கு வர்றதுன்னு ஐடியா பண்ணிட்டு தூங்கப் போனா, அடுத்தநாள் காலை ஆறுமணிக்கே காலிங் பெல் கதறியது. கதவை திறந்தால் என் மாமியாரின் தூரத்து சொந்தம் பல்லைக் காட்டிக் கொண்டு நின்றார்கள். 'எம் மவனுக்கு அடையார்-ல இண்டர்வியூ,. மெட்ராஸ் போறோம்ன்னு தெரிஞ்சவுடனே சிவகாமியக்கா (என் மாமியார்தான்) நம்ம வூட்டில்தான் தங்கணும்ன்னு சொல்லிடுச்சு. அதான் முதல் நாளே கிளம்பி வந்திட்டோம்'ன்னு சொல்ல, நானும் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை ஆசையாய் உபசரிச்சேன். காலை டிபன் சாப்பிட்ட கையோடு, 'இன்னேரம் சிவகாமி அக்காவா இருந்தா கோழி அடிச்சு குழம்பு வைச்சிருக்கும்" என்று அவர்கள் சொல்ல மதியமே கோழி வாங்கி குழம்பு வைத்தோம்.
அடுத்த நாள் அவங்களை இண்டர்வியூக்கு கூட்டிப் போக என் கணவர்தான் லீவ் போட்டார். அதற்கு அடுத்த நாள் சென்னையை சுத்திக்காட்ட நான் லீவ். ஒருவாரம் கழிச்சு அவங்க ஊருக்கு கிழம்பும் போது, அடிக்கடி வாங்கன்னு சொன்னது தப்புன்னு இன்னிக்கு வருத்தப்படறேன். பத்து நாள் கழிச்சு என் மாமனார் போன் பண்ணினார். தொகுதி எம்.எல்.ஏவைப் பார்க்க ஊர்க்காரங்க அஞ்சு பேர் வருவாங்க, வீட்டில் தங்க வெச்சு நல்லா கவனிச்சு அனுப்பங்கன்னும் சொன்னார். நாங்களும் நல்லாத்தான் பார்த்து அனுப்பினோம். ஆனால் அதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. (எங்க மாமா ஊரில் கவுன்சிலர் எலக்சனில் நின்னு தோத்துப் போனவர், அதுக்கே அரசியல்வாதி கணக்கா மாசத்துக்கு ஒரு தடவை சட்டசபையில் யாரையாவது பார்க்கணும்ன்னு நாலஞ்சு பேரோட கிளம்பி வந்திருவாங்க) சென்னை வந்த ரெண்டாவது மாசம், எங்க நாத்தனாரோட மச்சான் வேலை தேடி சென்னை வர, என் அண்ணன் வீட்டைத் தவிர வேறேங்கும் போகக் கூடாதுன்னு சொல்லியே அனுப்பியிருக்காங்க நாத்தனார். அவன் கொண்டு வந்த காசு ஐஞ்சே நாளில் கரைய, ஆரம்பிச்சது எங்களுக்கு தலைவலி. சொந்தக்காரனாச்சே, அதுவும் நாத்தனாரோட மச்சான், வேற வழி அவன் ஊர் சுத்த ஆட்டோ காசு குடுத்திட்டு நானும் என் ஹஸ்பெண்டும் பஸ் டிக்கெட்டுக்கே கடன் வாங்க வேண்டிய நிலை. இதை இப்படியே விட்டா சரிவராதுன்னு அவனுக்கு ஒரு வேலை தேடிக் குடுத்தோம். அப்பவும் ஒரு மாசம் தங்கிட்டுத்தான் கிளம்பினான். விட்டது ஏழரைன்னு நினைச்சா அதை விட பெரிய பூதமெல்லாம் வந்தது. பக்கத்து வீடுகளில் பத்து நூறுன்னு கை மாத்து வாங்கியிருக்கான். அவங்கெல்லாம் எங்களை கேக்க, பணம் குடுத்து தீர்த்தோம். இது கூட பரவாயில்லைங்க. ஹவுஸ் ஓனர் பொண்ணுக்கு ரூட் விட்டு ஊர் சுத்திட்டு வேலை கிடைச்சதும் அந்த பொண்ணுக்கிட்ட சொல்லாம கழண்டுக்கிட்டான். விசயம் வீட்டில் தெரிய வர, நாங்க வீடு காலி பண்ண வேண்டிய சூழ்நிலை.
அதற்குப் பிறகு இன்னும் ஏழரை எங்க வீட்டில் ரூம் போட்டு உட்கார்ந்தது. ஆமாங்க கோயம்பேடு பஸ் ஸாண்டுக்கு பக்கத்திலேயே குடி போக, ஊரில் இருந்து சும்மான்னாச்சுக்கும் சென்னை வரவங்க கூட எங்க வீட்டுக்கு வந்து தங்க ஆரம்பிச்சாங்க. வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா சந்தோஷப்படாம இப்படி வருத்தப்படறேன்னு நினைக்கிறீங்களா? என் கேரக்டர்-ல ஒரு வாரம் இருந்து பாருங்க தெரியும்.
பெரிய ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்கணும்ன்னு ஒரு கூட்டம், ஹை கோர்ட்-ல கேஸ் நடத்துபவர்கள், சென்னையில் இண்டர்வீயூ இப்படி வாரம் ஒருமுறை யாராவது எங்க வீட்டில் இருப்பாங்க. எங்க வீட்டிக்கு `மினி ஹோட்டல்` என்று பக்கத்து வீடுகளில் பெயர் வைக்குபடி ஆகிடுச்சு. பின்னே எப்பவும் எங்க. வீடு ஜே ஜே-ன்னு இருக்கும். காலையிலேயும் நைட்டும் விதவிதமா சமைக்கணும். ஞாயிற்றுக் கிழமை லீவுதானேன்னு ரெஸ்ட் எடுக்க நினைக்க முடியாது. காலையில் ஆறு மணிக்கே கதவு தட்டும் சத்தம் கேட்கும் போது பத்திக் கொண்டு வரும். கொடுமை, வீட்டுக்குள்ள தானே இருக்கறோம்ன்னு நைட்டியோ, ஜீன்ஸ் குர்தாவோ போட்டுக்கிட்டு நிக்க முடியாது. அப்புறம் சிவகாமி மருமக சரியில்லைன்னு சொந்தக் காரங்களுக்கு மத்தியில் பேச்சு வந்திடும். (ஒரு முறை நானும் என் கணவரும் சோபாவில் சேர்ந்து உட்கார்ந்திருக்க, அதெப்படி ஆம்பிளைக்கு சமமா உட்காரலாம்ன்னு என் மாமியாரிடம் யாரோ பத்த வைத்திருக்கிறார்கள்).
ஒரு தடவை ஊரில் திருட்டு கேஸில் மாட்டிக் கொண்ட எங்க சொந்தக்காரர் ஒருவர் போலீஸில் இருந்து தப்பிக்க எங்க வீட்டுக்கு ஓடி வர அவரைத் தேடி போலீஸ் வர, அக்கம் பக்கம் பிரச்சனை ஆகி வேறு வீடு, அப்புறம் ஊரை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி வழக்கம் போல எங்க வீட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை தேடி வந்த கும்பல் கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்ய, வீட்டை காலி செய்தோம். இப்படி நாங்கள் அடிக்கடி வீடு மாற்றிக் கொண்டு இருந்தாலும் விருந்தாளிகள் என்ற பெயரில் தொந்தரவுகள் வருவது மட்டும் குறையவில்லை.
சரி, வர்றதுதான் வராங்க, ஒரு போன் பண்ணி சொல்லிட்டு வரலாமே, அதெல்லாம் கிடையாது நேரா பெட்டியோடு வீட்டு வாசலுக்கு வந்திடுவாங்க. (முகவரி உபயம் வேறு யார் என் மாமியாரும் மாமனாரும்தான்). சில பேர் வந்திறங்கிட்டு போன் பண்ணி வந்து கூட்டி போகச் சொல்லுவாங்க. நிக்கிற இடத்தோட அட்ரஸீம் தெளிவா தெரியாது. கண்டுபிடிக்கறதுக்குள் நம்ம தலை உருளும். இன்னும் சில பேர் ஆட்டோ புடிச்சு நேரா வீட்டுக்கு வந்திட்டு, `என்னாம்மா இம்புட்டு காசு கேக்கறான் இந்த ஆட்டோகாரன். நீ பேசி செட்டில் பண்ணு-ன்னு சொல்லிவிட்டு நெடு நெடுன்னு வீட்டுக்குள் போய்டுவாங்க. நாமதான் 200, 300-ன்னு அழணும்.
அப்படியே வந்தாலும் சும்மா-வா இருக்காங்க, படிக்கட்டில் எச்சில் துப்பறது, கிராமத்து பழக்கத்துல பக்கத்து வீடுகள்ல போய் ஊர்கதை கேக்கறதுன்னு எதாவது செய்யப் போய் நாங்க `சாரி` கேக்க வேண்டியிருக்கும். மாசக் கடைசி நேரம் மளிகை கடையில் கடன் சொல்லி சாமான் வாங்க வேண்டியிருக்கும். வந்து செல்பவர்களில் சின்னப் பிள்ளைகள் இருந்தால் ஊருக்குப் போகும் போது காசு தந்து அனுப்ப வேண்டியிருக்கும். சமயத்தில் யாரேனும் எங்களுடன் ஷாப்பிங் வர நேரிட்டால் அவர்கள் வாங்குவதற்கும் பில் கட்ட வேண்டியிருக்கும். இங்க வந்த புதுசில் ஸ்கூல் பசங்களுக்கு டியூசன் எடுத்துக்கிட்டு இருந்தேன். வர்றவங்க நடுஹாலில் உட்கார்ந்து சத்தமா அரட்டை அடிச்சா அந்த புள்ளைங்க எப்படி படிக்கும். மூணே மாசத்தில் டியூசன் வர்றது நின்னிடுச்சு. மாசம் 1500 ரூபாய் வருமானத்திற்கு ஆப்பு. இதில வர்றவங்களுக்காக லீவ் எடுத்தா சம்பளத்தில் கட்.
இதைவிட பர்சனலா ஒரு விசயம் சொல்லட்டுமா, அடிக்கடி ஆட்கள் வர்றதில் என் புருஷன்கிட்ட கூட சரியா பேச முடியறது இல்லை. ஒத்தையா கல்யாணம் ஆகாத இளம் பெண் யாராவது வந்தா அந்த பொண்ணை ஹாலில் தனியா படுக்க வைக்க முடியுமா? அவளுக்கு துணையா பெட்ரூமில் நான் இருக்க, என் புருஷன் ஹாலில் தூங்குவார். ஒருமுறை எண்ட்ரன்ஸ் கோச்சிங்காக வந்த பொண்ணு ஒன்றரை மாசம் எங்க வீட்டில் தங்க, என் புருஷனைப் பார்க்க பாவமா இருந்தது.
என்ன உங்களுக்கே என்னைப் பார்த்தா வருத்தமா இருக்கா? இது சென்னை வாழ்க்கையோட ஒரு பக்கம்தான். இன்னோரு பக்கமும் சொன்னா இன்னும் பீல் பண்ணுவீங்க. ஊரில் இருந்து போன்-ன்னாவே அலற அளவுக்கு எங்க நிலைமை ஆகிப் போயிருச்சு. பின்னே எவனாவது போன் பண்ணி, `அக்கா ஜாவா புக் வாங்கி அனுப்புங்க`ன்னு சொல்லுவான். நானும் பாரீஸ்-ல தேடிப் புடிச்சு வாங்கி அனுப்புவேன். ஊருக்கு போகும் போது அந்த புக் காசு பத்தி வாயே திறக்க மாட்டாங்க. சென்னையில் புடவை கம்மி விலையாமே, குடவுன் தெரு-ல ரெண்டு காட்டன் புடவை எடுத்துவான்னு பக்கத்து வீட்டம்மா சொல்லும். வாங்கிப் போனா கலர் சரியில்லை மாத்தி தாம்பாங்க. அடுத்த முறை ஊருக்கு போகும் போது மாத்திட்டு போனா, இதை விட நல்லதா சைக்கிளில் புடவை விக்கறவன் கொண்டு வருவான்-ன்னு சொல்லுவாங்க. அவன்கிட்டேயே வாங்க வேண்டியது தான பக்கி,-ன்னு கத்த தோணும். இப்படி சயின்ஸ் ரிசர்ச் புக், கவர்மெண்ட் வேலைக்கு அப்பிளிகேஷன், புது மாடல் செல்போன்-ன்னு எதாவது வாங்கிக்கிட்டு போகணும். அதில் பாதிக்கும் பாதி காசு திரும்ப வராது. ஊரில் காது குத்து, கல்யாணம் வைச்சாலும் மறக்காம லீவ் போட்டு போய் வரணும். இல்லாட்டி மெட்ராஸ் போன சிவகாமி புள்ளையும் மருமகளும் நம்மை மதிக்கலைன்னு சொந்தக்காரங்க பேசுவாங்க. அப்புறம் என் மாமியார் சாமியாடாம விடமாட்டாங்க.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இல்ல எங்க வீட்டுக்கு மட்டும்தான் இப்படி தொல்லைகள் இருக்கா? இல்லை கிராமத்தில் இருந்து வந்து சென்னையில் செட்டில் ஆகியிருக்கிற எல்லோரும் இந்த பிரச்சனை இருக்கா? அதை விடுங்க இந்த வாரம் பீரியா சந்தோஷமா வீட்டில் யாரும் இல்லாம நானும் என் புருஷனும் மட்டும் இருக்கோம். அட ஆமாங்க. எங்க தூரத்து சொந்தத்தில் இருந்து சினிமா-ல சேரணும்ன்னு ஒருத்தன் வந்து இருபது நாள் தங்கியிருந்தான். என் மாமனாரோட தங்கச்சி பொண்ணு ஐ.ஏ.எஸ் கோச்சிங்-காக ரெண்டு மாசமா தங்கியிருந்தா.. அவங்க ரெண்டு பேருக்கும் லவ்வாகி ஊரை விட்டு சாரி எங்க வீட்டை விட்டு ஓடிட்டாங்க. நாங்கதான் அதுக்கு உடந்தை-ன்னு ஊரில் எங்க மேல கோபத்தில் இருக்காங்க. `இப்பத்தான் நிம்மதியா இருக்க முடியுதுன்னு என் புருஷனும் சந்தோஷப்படறார். நேத்து ரொம்ப மாசத்துக்கு பிறகு நாங்க ரெண்டு பேர் மட்டும் பீச், சினிமா, அப்படியே ஹோட்டலுக்கும் போனோம். ஊரில் கெட்ட பேரு வந்தாக் கூட பரவாயில்லைங்க. ஞாயிற்றுக் கிழமை ஒன்பது மணி வரைக்கும் தூங்க முடியுதே? அப்பாடி... அது போதும்.. ஹலோ.. இருங்க போன் அடிக்குது.. மறுபடியும் யார் வரப்போறாங்கன்னு தெரியலையே? ஆண்டவா என்னைக் காப்பாத்து..
பின்குறிப்பு: இது நான் சென்னையில் தங்கியிருக்கும் போது- பக்கத்து வீட்டுக்கு அக்காவுக்கு ஏற்பட்ட சம்பவம். அதை அவர் சொல்வது போல எழுதினேன். நிச்சயமாய் நீங்களும் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்து/உணர்ந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..
Friday, July 9, 2010
எஸ்க்கியூஸ் மீ... எனக்கு ஒரு டவுட்...
வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கிற இந்த சமயம் டி..வி.டி மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் தினமும் 2 தமிழ் சினிமா பார்க்கிறேன். (1970-யில வந்த படம் தொடங்கி டப்பிங் படங்களும் அதில் அடக்கம்). அதன் விளைவே இந்த பதிவு.
டவுட் நெ 1:
நாலஞ்சு பொண்ணுங்க மொத்தமா நடந்து வரும் போது, பளீர்-ன்னு காட்டற ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோ லவ் பண்ண ஆரம்பிக்கிறாரே? அப்புறம் ஹீரோ போற காபி ஷாப், பஸ் ஸ்டாண்ட்-ன்னு எல்லா இடத்திலேயேயும் அந்த பொண்ணும் இருக்கே அது எப்படி?
அதே மாதிரி நிஜத்தில் யாருக்கேனும் லவ் வந்திருக்கா?
டவுட் நெ 2:
மலை உச்சியில் இருந்து தண்ணிக்குள்ள குதிக்கும் போதோ (நீச்சல் தெரியாட்டியும்), அடுக்கு மாடியில் இருந்து ஓடற லாரி மேல குதிக்கிறப்பவும் ஹீரோவுக்கு ஒன்னுமே ஆகறதில்லை.
ஆனா மாடியில் இருந்து படிக்கட்டில் உருண்டு விழற அம்மா கேரக்டரும், மனைவி கேரக்டரும் ஸ்பாட்டிலேயே செத்து போறாங்களே அது எப்படி?
டவுட் நெ 3:
ஹீரோ-வோட காதலியையோ, குடும்பத்தையோ கடத்தி வெச்சுக்கிட்டு வில்லன் மட்டும் மிரட்டறாரே?
வில்லனோட குடும்பத்தை கடத்தி வெச்சிக்கிட்டு ஏன் ஹீரோ மிரட்ட கூடாது?
டவுட் நெ 4:
ஹீரோவோ, வில்லனோ நினைச்சவுடனே பிளைட் புடிச்சு அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ கிளம்பி போறாங்களே?
அவங்களுக்கு மட்டும் எப்படி உடனே டிக்கெட் கிடைக்குது? விசா இல்லாம எப்படி போறாங்க? அதுவும் இல்லாம விசிட்டர் விசாவா இருந்தால் கூட அப்பிளை பண்ணி ரெண்டு வாரமாவது ஆகணுமே?
(நமக்கு ஏற்காடு எக்ஸிப்ரஸில் ஊருக்கு போக டிக்கெட் எடுக்கவே ஒரு மாசத்துக்கு முன்னாடி புக் பண்ண வேண்டியிருக்கு?)
டவுட் நெ 5:
ஹீரோயினை கடத்திக்கிட்டு வர்ற வில்லன், இப்பவே நமக்கு கல்யாணம்-ன்னு சொல்லி தயாராக சொல்லறார். ஹீரோயினும் புடவை கட்டிக்கிட்டு வராங்க? எப்படி அவங்களுக்கு புடவையெல்லாம் எடுத்து பிளவுஸ் தைச்சு ஏற்கனவே வைச்சிருப்பாங்களா?
சரி வில்லனை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லாத ஹீரோயின் ஏன் நகையெல்லாம் போட்டு தலை நிறைய பூ வைச்சு, புல் மேக்கப்போட வராங்க?
டவுட் நெ 6:
ஹீரோ ஓங்கி ஒரு அடி அடிக்கும் போதே வில்லனோட அடியாள் கீழே விழுந்தடறார்.
ஆனா வில்லன் துப்பாக்கியால சுட்டு மயங்கி விழுந்த பிறகும், எந்திரிச்சு ஹீரோ சண்டை போடறாரே அது எப்படி?
டவுட் நெ 7:
அதெப்படி ஊருக்குள்ள ஆயிரம் பேர் இருந்தும் வில்லன் பண்ற அநியாயங்களை ஹீரோ மட்டும் கண்டுபிடிக்கிறார்?
(அவருக்கு கவர்மெண்ட்-ல ஒரு வேலை போட்டு குடுத்தா, நடக்கிற எல்லா ஊழல்களையும் கண்டுபிடிச்சிடுவாரே.. யாராவது எம்பிளாய்மெண்ட் ஆபீசில் சொல்லுங்களேன்.)
டவுட் நெ 8:
கோமா ஸ்டேஜில் இருக்கற ஹீரோ, அத்தனை தடவை டாக்டர் முயற்சி செஞ்சும் கண்விழிக்காம, எப்படி ஹீரோயின் விடற கண்ணீர், மேல படும் போது மட்டும் எந்திரிக்கிறார்?
நடக்கவே முடியாம படுத்திருந்தவரால எப்படி, உடனே ஆக்ரோஷமா கத்தி வில்லனை அடிக்க முடியுது?
டவுட் நெ 9:
வில்லனோட அடியாட்கள், மொத்தமா பத்து பேர், பன்னிரெண்டு பேர் ரோட்டில அரிவாளோட சுத்தறாங்களே? அது மாதிரி நிஜ வாழ்க்கையில் யாராவது தெருவில் அரிவாளோட போறாங்களா?
டவுட் நெ 10:
எல்லா ஹீரோவும் ரயிலேறி சென்னைக்கு வராங்களே அது எந்த நம்பிக்கையில? அப்படி வந்தபிறகும் ஒரு வேலையும் இல்லாம, செல்போன், பைக்-ன்னு எப்படி அவங்களால சுத்த முடியுது? அட்லீஸ் ஹீரோயினுக்கு வாங்கித் தர ஐஸ்கீரிம் காசுக்கு என்ன பண்ணுவாங்க?
பின்குறிப்பு: இதெல்லாம் சினிமா பார்க்கற எல்.கே.ஜி பிள்ளை கேட்க வேண்டிய கேள்வி? நானும் அந்த வயசிலேயே இருக்கறதாலதான் இது மாதிரி சந்தேகம் வருது.. உங்க அறிவுக்கும் திறமைக்கும் இன்னும் பல டவுட்ஸ் வரும் மக்கா..
டவுட் நெ 1:
நாலஞ்சு பொண்ணுங்க மொத்தமா நடந்து வரும் போது, பளீர்-ன்னு காட்டற ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோ லவ் பண்ண ஆரம்பிக்கிறாரே? அப்புறம் ஹீரோ போற காபி ஷாப், பஸ் ஸ்டாண்ட்-ன்னு எல்லா இடத்திலேயேயும் அந்த பொண்ணும் இருக்கே அது எப்படி?
அதே மாதிரி நிஜத்தில் யாருக்கேனும் லவ் வந்திருக்கா?
டவுட் நெ 2:
மலை உச்சியில் இருந்து தண்ணிக்குள்ள குதிக்கும் போதோ (நீச்சல் தெரியாட்டியும்), அடுக்கு மாடியில் இருந்து ஓடற லாரி மேல குதிக்கிறப்பவும் ஹீரோவுக்கு ஒன்னுமே ஆகறதில்லை.
ஆனா மாடியில் இருந்து படிக்கட்டில் உருண்டு விழற அம்மா கேரக்டரும், மனைவி கேரக்டரும் ஸ்பாட்டிலேயே செத்து போறாங்களே அது எப்படி?
டவுட் நெ 3:
ஹீரோ-வோட காதலியையோ, குடும்பத்தையோ கடத்தி வெச்சுக்கிட்டு வில்லன் மட்டும் மிரட்டறாரே?
வில்லனோட குடும்பத்தை கடத்தி வெச்சிக்கிட்டு ஏன் ஹீரோ மிரட்ட கூடாது?
டவுட் நெ 4:
ஹீரோவோ, வில்லனோ நினைச்சவுடனே பிளைட் புடிச்சு அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ கிளம்பி போறாங்களே?
அவங்களுக்கு மட்டும் எப்படி உடனே டிக்கெட் கிடைக்குது? விசா இல்லாம எப்படி போறாங்க? அதுவும் இல்லாம விசிட்டர் விசாவா இருந்தால் கூட அப்பிளை பண்ணி ரெண்டு வாரமாவது ஆகணுமே?
(நமக்கு ஏற்காடு எக்ஸிப்ரஸில் ஊருக்கு போக டிக்கெட் எடுக்கவே ஒரு மாசத்துக்கு முன்னாடி புக் பண்ண வேண்டியிருக்கு?)
டவுட் நெ 5:
ஹீரோயினை கடத்திக்கிட்டு வர்ற வில்லன், இப்பவே நமக்கு கல்யாணம்-ன்னு சொல்லி தயாராக சொல்லறார். ஹீரோயினும் புடவை கட்டிக்கிட்டு வராங்க? எப்படி அவங்களுக்கு புடவையெல்லாம் எடுத்து பிளவுஸ் தைச்சு ஏற்கனவே வைச்சிருப்பாங்களா?
சரி வில்லனை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லாத ஹீரோயின் ஏன் நகையெல்லாம் போட்டு தலை நிறைய பூ வைச்சு, புல் மேக்கப்போட வராங்க?
டவுட் நெ 6:
ஹீரோ ஓங்கி ஒரு அடி அடிக்கும் போதே வில்லனோட அடியாள் கீழே விழுந்தடறார்.
ஆனா வில்லன் துப்பாக்கியால சுட்டு மயங்கி விழுந்த பிறகும், எந்திரிச்சு ஹீரோ சண்டை போடறாரே அது எப்படி?
டவுட் நெ 7:
அதெப்படி ஊருக்குள்ள ஆயிரம் பேர் இருந்தும் வில்லன் பண்ற அநியாயங்களை ஹீரோ மட்டும் கண்டுபிடிக்கிறார்?
(அவருக்கு கவர்மெண்ட்-ல ஒரு வேலை போட்டு குடுத்தா, நடக்கிற எல்லா ஊழல்களையும் கண்டுபிடிச்சிடுவாரே.. யாராவது எம்பிளாய்மெண்ட் ஆபீசில் சொல்லுங்களேன்.)
டவுட் நெ 8:
கோமா ஸ்டேஜில் இருக்கற ஹீரோ, அத்தனை தடவை டாக்டர் முயற்சி செஞ்சும் கண்விழிக்காம, எப்படி ஹீரோயின் விடற கண்ணீர், மேல படும் போது மட்டும் எந்திரிக்கிறார்?
நடக்கவே முடியாம படுத்திருந்தவரால எப்படி, உடனே ஆக்ரோஷமா கத்தி வில்லனை அடிக்க முடியுது?
டவுட் நெ 9:
வில்லனோட அடியாட்கள், மொத்தமா பத்து பேர், பன்னிரெண்டு பேர் ரோட்டில அரிவாளோட சுத்தறாங்களே? அது மாதிரி நிஜ வாழ்க்கையில் யாராவது தெருவில் அரிவாளோட போறாங்களா?
டவுட் நெ 10:
எல்லா ஹீரோவும் ரயிலேறி சென்னைக்கு வராங்களே அது எந்த நம்பிக்கையில? அப்படி வந்தபிறகும் ஒரு வேலையும் இல்லாம, செல்போன், பைக்-ன்னு எப்படி அவங்களால சுத்த முடியுது? அட்லீஸ் ஹீரோயினுக்கு வாங்கித் தர ஐஸ்கீரிம் காசுக்கு என்ன பண்ணுவாங்க?
பின்குறிப்பு: இதெல்லாம் சினிமா பார்க்கற எல்.கே.ஜி பிள்ளை கேட்க வேண்டிய கேள்வி? நானும் அந்த வயசிலேயே இருக்கறதாலதான் இது மாதிரி சந்தேகம் வருது.. உங்க அறிவுக்கும் திறமைக்கும் இன்னும் பல டவுட்ஸ் வரும் மக்கா..
Subscribe to:
Posts (Atom)
