வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கிற இந்த சமயம் டி..வி.டி மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் தினமும் 2 தமிழ் சினிமா பார்க்கிறேன். (1970-யில வந்த படம் தொடங்கி டப்பிங் படங்களும் அதில் அடக்கம்). அதன் விளைவே இந்த பதிவு.
டவுட் நெ 1:
நாலஞ்சு பொண்ணுங்க மொத்தமா நடந்து வரும் போது, பளீர்-ன்னு காட்டற ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோ லவ் பண்ண ஆரம்பிக்கிறாரே? அப்புறம் ஹீரோ போற காபி ஷாப், பஸ் ஸ்டாண்ட்-ன்னு எல்லா இடத்திலேயேயும் அந்த பொண்ணும் இருக்கே அது எப்படி?
அதே மாதிரி நிஜத்தில் யாருக்கேனும் லவ் வந்திருக்கா?
டவுட் நெ 2:
மலை உச்சியில் இருந்து தண்ணிக்குள்ள குதிக்கும் போதோ (நீச்சல் தெரியாட்டியும்), அடுக்கு மாடியில் இருந்து ஓடற லாரி மேல குதிக்கிறப்பவும் ஹீரோவுக்கு ஒன்னுமே ஆகறதில்லை.
ஆனா மாடியில் இருந்து படிக்கட்டில் உருண்டு விழற அம்மா கேரக்டரும், மனைவி கேரக்டரும் ஸ்பாட்டிலேயே செத்து போறாங்களே அது எப்படி?
டவுட் நெ 3:
ஹீரோ-வோட காதலியையோ, குடும்பத்தையோ கடத்தி வெச்சுக்கிட்டு வில்லன் மட்டும் மிரட்டறாரே?
வில்லனோட குடும்பத்தை கடத்தி வெச்சிக்கிட்டு ஏன் ஹீரோ மிரட்ட கூடாது?
டவுட் நெ 4:
ஹீரோவோ, வில்லனோ நினைச்சவுடனே பிளைட் புடிச்சு அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ கிளம்பி போறாங்களே?
அவங்களுக்கு மட்டும் எப்படி உடனே டிக்கெட் கிடைக்குது? விசா இல்லாம எப்படி போறாங்க? அதுவும் இல்லாம விசிட்டர் விசாவா இருந்தால் கூட அப்பிளை பண்ணி ரெண்டு வாரமாவது ஆகணுமே?
(நமக்கு ஏற்காடு எக்ஸிப்ரஸில் ஊருக்கு போக டிக்கெட் எடுக்கவே ஒரு மாசத்துக்கு முன்னாடி புக் பண்ண வேண்டியிருக்கு?)
டவுட் நெ 5:
ஹீரோயினை கடத்திக்கிட்டு வர்ற வில்லன், இப்பவே நமக்கு கல்யாணம்-ன்னு சொல்லி தயாராக சொல்லறார். ஹீரோயினும் புடவை கட்டிக்கிட்டு வராங்க? எப்படி அவங்களுக்கு புடவையெல்லாம் எடுத்து பிளவுஸ் தைச்சு ஏற்கனவே வைச்சிருப்பாங்களா?
சரி வில்லனை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லாத ஹீரோயின் ஏன் நகையெல்லாம் போட்டு தலை நிறைய பூ வைச்சு, புல் மேக்கப்போட வராங்க?
டவுட் நெ 6:
ஹீரோ ஓங்கி ஒரு அடி அடிக்கும் போதே வில்லனோட அடியாள் கீழே விழுந்தடறார்.
ஆனா வில்லன் துப்பாக்கியால சுட்டு மயங்கி விழுந்த பிறகும், எந்திரிச்சு ஹீரோ சண்டை போடறாரே அது எப்படி?
டவுட் நெ 7:
அதெப்படி ஊருக்குள்ள ஆயிரம் பேர் இருந்தும் வில்லன் பண்ற அநியாயங்களை ஹீரோ மட்டும் கண்டுபிடிக்கிறார்?
(அவருக்கு கவர்மெண்ட்-ல ஒரு வேலை போட்டு குடுத்தா, நடக்கிற எல்லா ஊழல்களையும் கண்டுபிடிச்சிடுவாரே.. யாராவது எம்பிளாய்மெண்ட் ஆபீசில் சொல்லுங்களேன்.)
டவுட் நெ 8:
கோமா ஸ்டேஜில் இருக்கற ஹீரோ, அத்தனை தடவை டாக்டர் முயற்சி செஞ்சும் கண்விழிக்காம, எப்படி ஹீரோயின் விடற கண்ணீர், மேல படும் போது மட்டும் எந்திரிக்கிறார்?
நடக்கவே முடியாம படுத்திருந்தவரால எப்படி, உடனே ஆக்ரோஷமா கத்தி வில்லனை அடிக்க முடியுது?
டவுட் நெ 9:
வில்லனோட அடியாட்கள், மொத்தமா பத்து பேர், பன்னிரெண்டு பேர் ரோட்டில அரிவாளோட சுத்தறாங்களே? அது மாதிரி நிஜ வாழ்க்கையில் யாராவது தெருவில் அரிவாளோட போறாங்களா?
டவுட் நெ 10:
எல்லா ஹீரோவும் ரயிலேறி சென்னைக்கு வராங்களே அது எந்த நம்பிக்கையில? அப்படி வந்தபிறகும் ஒரு வேலையும் இல்லாம, செல்போன், பைக்-ன்னு எப்படி அவங்களால சுத்த முடியுது? அட்லீஸ் ஹீரோயினுக்கு வாங்கித் தர ஐஸ்கீரிம் காசுக்கு என்ன பண்ணுவாங்க?
பின்குறிப்பு: இதெல்லாம் சினிமா பார்க்கற எல்.கே.ஜி பிள்ளை கேட்க வேண்டிய கேள்வி? நானும் அந்த வயசிலேயே இருக்கறதாலதான் இது மாதிரி சந்தேகம் வருது.. உங்க அறிவுக்கும் திறமைக்கும் இன்னும் பல டவுட்ஸ் வரும் மக்கா..
Friday, July 9, 2010
Wednesday, June 30, 2010
நீ என்பது நானல்லவோ...
என் காலத்தின் சக்கரம் நீ!
நீ தவறிவிட்ட நிமிடம் நான்!
என் பக்கங்களின் ஆதிச் சுழி நீ!
உன் எழுத்துக்களின் முற்றுப்புள்ளி நான்!
என் உலகத்தின் ஆதிமானுடம் நீ!
நீ கடந்துசென்ற பாதை நான்!
என் வெளிச்சங்களுக்கு காரணம் நீ!
உன் இருளின் பிம்பம் நான்!
என் ஓசைகளின் பரம்பொருள் நீ!
உன் ஒற்றை மெளனம் நான்!
நான் வரைந்த ஓவியம் நீ!
நீ கிறுக்கிய காகிதம் நான்!
என் வானில் முழு நிலவு நீ!
உன் உதிர்ந்த நட்சத்திரம் நான்!
நான் சேமித்த பொக்கிஷம் நீ!
நீ தூக்கி எறிந்த குப்பை நான்!
நீ தவறிவிட்ட நிமிடம் நான்!
என் பக்கங்களின் ஆதிச் சுழி நீ!
உன் எழுத்துக்களின் முற்றுப்புள்ளி நான்!
என் உலகத்தின் ஆதிமானுடம் நீ!
நீ கடந்துசென்ற பாதை நான்!
என் வெளிச்சங்களுக்கு காரணம் நீ!
உன் இருளின் பிம்பம் நான்!
என் ஓசைகளின் பரம்பொருள் நீ!
உன் ஒற்றை மெளனம் நான்!
நான் வரைந்த ஓவியம் நீ!
நீ கிறுக்கிய காகிதம் நான்!
என் வானில் முழு நிலவு நீ!
உன் உதிர்ந்த நட்சத்திரம் நான்!
நான் சேமித்த பொக்கிஷம் நீ!
நீ தூக்கி எறிந்த குப்பை நான்!
Thursday, June 24, 2010
நான் கடவுள்
சாரி ராஜி .. நீங்களும் கடவுள் பத்தி தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அதுக்குப் பிறகு ஏனோ ஒரு போஸ்ட் கூட போடமுடியலை. ஏதாச்சும் சாமி குத்தமா இருக்குமோ?
வழக்கமா எல்லா தொடர் பதிவுகளும், சின்ன வயசில் இருந்து என்று ஆரம்பிக்கும். அதே மாதிரியே நானும் ஆரம்பிக்கிறேன்.
`சின்ன வயசில் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். பாட்டி வீட்டுக்குப் போயிருந்தபோது, பக்கத்து வீட்டு மரத்தில் எலுமிச்சை பழம் திருடி வீட்டுக்கு கொண்டு வந்தோம். திருடினா சாமி கண்ணைக் குத்திடும் என்று பாட்டி சொன்னதில் இருந்து கடவுள் என்பவர் அன்றிருந்து எனக்குள் ஒரு ஹீரோ ஆகிப்போனார்.
அதன் பின் எல்லாவற்றிற்கும் எனக்கு சாமிதான் அடிப்படை. நாலாவது படிக்கும் போது, `ஏன் இந்தியா பாகிஸ்தான் கூட சண்டை போடணும். சாமிக்கு சர்க்கரை பொங்கல் வைச்சு வேண்டிக்கிட்டா, சண்டை வராதே-ன்னு நினைச்ச ஆளு நான். ஜாமிண்ட்ரி பாக்ஸ் தொலைஞ்சு போச்சுன்ன்னாக் கூட கடவுள்-க்கிட்ட சூடம் பத்தி வெச்சு தேடிச் தர சொல்லிக்கிட்டு இருந்தேன்.
வளர வளர நிறைய பிராத்தனைகள் இருந்தது. அது நிறைவேறாத போது கடவுள் மீது கோபம் வந்தது.. ஏன் என்னை மட்டும் இப்படி சோதிக்கிற என கோபத்தில் கத்தி அழுவேன். கொஞ்ச நாள் உன் மூஞ்சியிலியே முழிக்க மாட்டேன் என்று டூ விட்டுவிட்டு பின் எதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் சரண்டர் ஆகிவிடுவேன்.
அப்போதெல்லாம் சாமி வந்து ஆடுபவர்களைப் பார்த்தால் எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். நல்ல மனது உடையவர்களுக்கும் பக்தி நிரம்பியவர்களுக்கும்தான் சாமி வரும் என நினைப்பேன்.
அம்மா பிரேமா மேல்மருவத்தூர் கோயிலின் தீவிர பக்தை.. எனக்கும் அந்த கோயிலுக்கு இருமுடி கட்டி கூட்டி போவார்கள். பிரதோஷம், சனிக்கிழமை இப்படி விரதம் இருப்பதற்காகவே காரணம் தேடும் நல்ல மனசுக்காரி அம்மா பிரேமா.
கொடுமுடியில் மகுடேஷ்வரர் கோயில் உண்டு. ஆற்றங்கரையில் மிக அழகாக இருக்கும். அந்த கோயில்தான் பள்ளி காலத்தில் தோழிகளுடன் சுற்றிய பொழுது போக்கு இடம். பிளஸ் டூ படிக்கும் போது, பழனிக்கு பாதயாத்திரை போயிருக்கிறேன்.
படிப்பு முடிந்த்து கோவையில் நான் படித்த கல்லூரியும் மருதமலை அடிவாரத்தில். நான் தங்கியிந்த ஹாஸ்டல் அருகிலேயே பெருமாள் கோவில் இருக்கும். (அங்கே தரும் புளிசாதமும் சர்க்கரைப் பொங்கலும் அவ்வளவு ருசியாக இருக்கும்.நான் கோயிலுக்குப் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்). காலேஜ் போகும் போதெல்லாம் அந்த சாமிக்கு விஷ் பண்ணாமல் போனது கிடையாது.
பக்தி முத்திப் போய் ஊர் மாரியம்மன் கோயில் தீ மித்திருக்கிறேன்.. எல்லாம் நான் சென்னையில் வேலைக்குச் சேரும் வரைதான். அதன் பின் எனக்கும் கடவுளுக்குமான இடைவெளி பெருகியது.
மரம் சூழ கோயில் பார்த்த எனக்கு, சென்னையில் செங்கல் கட்டிடத்திற்குள் பார்த்த சாமிகளை பிடிக்கவில்லை. வேலை நேரம் காரணமாக கோயிலுக்கு போக பிடிக்காமல் போக என் போக்கும் மாறியது. அதற்கு காரணம் என் அலுவகத்தில் என்னுடன் வேலை பார்த்தவர்கள்.
`சிவ பெருமான் இப்ப இருந்தார்-ன்னா புளு கிராஸில் அரஸ்ட் பண்ணிருவாங்க.. புலித் தோல் போர்த்திக்கிட்டு சுத்தறார்` என கேலி செய்யும் ஆட்கள். சொல்லப் போனால் கடவுள் இல்லை என்னும் கூட்டம். அவர்களுடன் சேர சேர எனக்கும் சாமி குறித்த நம்பிக்கை மாறியது.. `நீயெல்லாம் ஈரோட்டுக்காரப் பொண்ணா, உங்க ஊரில் இருந்த பெரியார் எத்தனை சொல்லும் புத்தி வராதா உனக்கு` என என்னிடம் கேட்டபிறகுதான நிறைய யோசிக்க ஆரம்பித்தேன்.
கடவுள் பேரைச் சொல்லி நாம்தான் ஏமாற்றிக் கொள்கிறோம். லிட்டர் லிட்டராக சிலைகள் மேலே கொட்டும் பாலை, ரோட்டில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு தரலாமேன்னு என்று நான் யோசித்த நாளில், எனக்குள் நாத்திகமும் ஆத்திகமும் இல்லாத பெண்ணைக் கண்டேன்.
சாமி சாமி-ன்னு லட்ச கணக்கில் நன்கொடை தருகிறீர்களே, ஒரு ஏழை பொண்னின் கல்யாணத்திற்கு உதவி செய்யுங்களேன் -ன்னு எதிர் வாதம் செய்கிறேன் இப்போது வரைக்கும்.
`பொட்டப் புள்ளையா பொறந்திட்டு சாமியை பகைச்சுக்காத` என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள். அதுக்காக கோயிலில் உட்கார்ந்திருந்தா காசு வந்திருமா, இந்த மாசம் வேலைக்கு போனாத்தான் சம்பளம் கிடைக்கும் என்று பதில் சொல்லியிருக்கிறேன்.
ஆக இப்போ எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சாமி பாட்டுக்கு கோயிலில் இருக்கட்டும், நாம் பாட்டுக்கு வேலையைப் பார்ப்போம். பாவமும் புண்ணியமும் ஏற்கனவே எழுதப்பட்டது. அதை மாற்ற முடியாது என விதியின் வீதியில் செல்கிறேன்...
வழக்கமா எல்லா தொடர் பதிவுகளும், சின்ன வயசில் இருந்து என்று ஆரம்பிக்கும். அதே மாதிரியே நானும் ஆரம்பிக்கிறேன்.
`சின்ன வயசில் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். பாட்டி வீட்டுக்குப் போயிருந்தபோது, பக்கத்து வீட்டு மரத்தில் எலுமிச்சை பழம் திருடி வீட்டுக்கு கொண்டு வந்தோம். திருடினா சாமி கண்ணைக் குத்திடும் என்று பாட்டி சொன்னதில் இருந்து கடவுள் என்பவர் அன்றிருந்து எனக்குள் ஒரு ஹீரோ ஆகிப்போனார்.
அதன் பின் எல்லாவற்றிற்கும் எனக்கு சாமிதான் அடிப்படை. நாலாவது படிக்கும் போது, `ஏன் இந்தியா பாகிஸ்தான் கூட சண்டை போடணும். சாமிக்கு சர்க்கரை பொங்கல் வைச்சு வேண்டிக்கிட்டா, சண்டை வராதே-ன்னு நினைச்ச ஆளு நான். ஜாமிண்ட்ரி பாக்ஸ் தொலைஞ்சு போச்சுன்ன்னாக் கூட கடவுள்-க்கிட்ட சூடம் பத்தி வெச்சு தேடிச் தர சொல்லிக்கிட்டு இருந்தேன்.
வளர வளர நிறைய பிராத்தனைகள் இருந்தது. அது நிறைவேறாத போது கடவுள் மீது கோபம் வந்தது.. ஏன் என்னை மட்டும் இப்படி சோதிக்கிற என கோபத்தில் கத்தி அழுவேன். கொஞ்ச நாள் உன் மூஞ்சியிலியே முழிக்க மாட்டேன் என்று டூ விட்டுவிட்டு பின் எதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் சரண்டர் ஆகிவிடுவேன்.
அப்போதெல்லாம் சாமி வந்து ஆடுபவர்களைப் பார்த்தால் எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். நல்ல மனது உடையவர்களுக்கும் பக்தி நிரம்பியவர்களுக்கும்தான் சாமி வரும் என நினைப்பேன்.
அம்மா பிரேமா மேல்மருவத்தூர் கோயிலின் தீவிர பக்தை.. எனக்கும் அந்த கோயிலுக்கு இருமுடி கட்டி கூட்டி போவார்கள். பிரதோஷம், சனிக்கிழமை இப்படி விரதம் இருப்பதற்காகவே காரணம் தேடும் நல்ல மனசுக்காரி அம்மா பிரேமா.
கொடுமுடியில் மகுடேஷ்வரர் கோயில் உண்டு. ஆற்றங்கரையில் மிக அழகாக இருக்கும். அந்த கோயில்தான் பள்ளி காலத்தில் தோழிகளுடன் சுற்றிய பொழுது போக்கு இடம். பிளஸ் டூ படிக்கும் போது, பழனிக்கு பாதயாத்திரை போயிருக்கிறேன்.
படிப்பு முடிந்த்து கோவையில் நான் படித்த கல்லூரியும் மருதமலை அடிவாரத்தில். நான் தங்கியிந்த ஹாஸ்டல் அருகிலேயே பெருமாள் கோவில் இருக்கும். (அங்கே தரும் புளிசாதமும் சர்க்கரைப் பொங்கலும் அவ்வளவு ருசியாக இருக்கும்.நான் கோயிலுக்குப் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்). காலேஜ் போகும் போதெல்லாம் அந்த சாமிக்கு விஷ் பண்ணாமல் போனது கிடையாது.
பக்தி முத்திப் போய் ஊர் மாரியம்மன் கோயில் தீ மித்திருக்கிறேன்.. எல்லாம் நான் சென்னையில் வேலைக்குச் சேரும் வரைதான். அதன் பின் எனக்கும் கடவுளுக்குமான இடைவெளி பெருகியது.
மரம் சூழ கோயில் பார்த்த எனக்கு, சென்னையில் செங்கல் கட்டிடத்திற்குள் பார்த்த சாமிகளை பிடிக்கவில்லை. வேலை நேரம் காரணமாக கோயிலுக்கு போக பிடிக்காமல் போக என் போக்கும் மாறியது. அதற்கு காரணம் என் அலுவகத்தில் என்னுடன் வேலை பார்த்தவர்கள்.
`சிவ பெருமான் இப்ப இருந்தார்-ன்னா புளு கிராஸில் அரஸ்ட் பண்ணிருவாங்க.. புலித் தோல் போர்த்திக்கிட்டு சுத்தறார்` என கேலி செய்யும் ஆட்கள். சொல்லப் போனால் கடவுள் இல்லை என்னும் கூட்டம். அவர்களுடன் சேர சேர எனக்கும் சாமி குறித்த நம்பிக்கை மாறியது.. `நீயெல்லாம் ஈரோட்டுக்காரப் பொண்ணா, உங்க ஊரில் இருந்த பெரியார் எத்தனை சொல்லும் புத்தி வராதா உனக்கு` என என்னிடம் கேட்டபிறகுதான நிறைய யோசிக்க ஆரம்பித்தேன்.
கடவுள் பேரைச் சொல்லி நாம்தான் ஏமாற்றிக் கொள்கிறோம். லிட்டர் லிட்டராக சிலைகள் மேலே கொட்டும் பாலை, ரோட்டில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு தரலாமேன்னு என்று நான் யோசித்த நாளில், எனக்குள் நாத்திகமும் ஆத்திகமும் இல்லாத பெண்ணைக் கண்டேன்.
சாமி சாமி-ன்னு லட்ச கணக்கில் நன்கொடை தருகிறீர்களே, ஒரு ஏழை பொண்னின் கல்யாணத்திற்கு உதவி செய்யுங்களேன் -ன்னு எதிர் வாதம் செய்கிறேன் இப்போது வரைக்கும்.
`பொட்டப் புள்ளையா பொறந்திட்டு சாமியை பகைச்சுக்காத` என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள். அதுக்காக கோயிலில் உட்கார்ந்திருந்தா காசு வந்திருமா, இந்த மாசம் வேலைக்கு போனாத்தான் சம்பளம் கிடைக்கும் என்று பதில் சொல்லியிருக்கிறேன்.
ஆக இப்போ எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சாமி பாட்டுக்கு கோயிலில் இருக்கட்டும், நாம் பாட்டுக்கு வேலையைப் பார்ப்போம். பாவமும் புண்ணியமும் ஏற்கனவே எழுதப்பட்டது. அதை மாற்ற முடியாது என விதியின் வீதியில் செல்கிறேன்...
Subscribe to:
Posts (Atom)


