Showing posts with label கவிதைகள்.. Show all posts
Showing posts with label கவிதைகள்.. Show all posts
Wednesday, June 9, 2010
அன்றிலிருந்து பூக்கள் பிடிக்கவில்லை
காலையில வாசல் தெளிக்கவும்
மணமணக்கும் பூவோடுதான்
லட்சுமி அத்தை வருவாள்!
முதல் குழந்தை பெத்துக்க
டவுன் ஆஸ்பத்திரிக்கு போனப்ப
மறக்காம பூ வெச்சிக்கிட்டாள்!
‘நீ வாக்கப்பட்டது
என் மகனுக்கா? இல்லை
மல்லிகை செடிக்கான்னு?
கேலியா பாட்டி கேட்பாள்!
பூ வாங்கன்னு போன
துரை மாமா, ராக்காயி கூட
ஓடினதால மல்லிகை புடிக்கலை.
‘இந்தியாவின் தேசிய பூ
தாமரை-ன்னு சொன்னது
பாரதி டீச்சர்தான்!
தண்ணீரில் ஒட்டாத தாமரை
இலையாட்டம், குடிகார புருஷனை
விலகி வந்தாங்க டீச்சர்.
அடம் புடிச்சு அழுதேன்னு
தஞ்சாவூரிலிர்ந்து பத்து ரூபாய்க்கு
ரெண்டு பூ வாங்கித் தந்தாங்க!
விபத்துக்கு டீச்சர் பலியாகி,
இறுதி ஊர்வலத்துல பார்த்ததுல
தாமரை பூவை புடிக்கலை!
பிறந்தப்ப ரோசாப்பூ நிறமுன்னும்
ஊரே ரசிச்சதுன்னும்,
கொஞ்சறப்ப அம்மாச்சி சொல்லும்!
நேரு மாமா கணக்கா
சட்டையில பூ தைச்சு திரிவேன்
பள்ளிக் கூடம் போறப்ப!
ஒரு லட்சம் காசிருந்தாலும்
ரோசா பூவா வாங்கிருவான்னு
சிநேகிதக்காரங்க சொல்லுவாங்க!
காதலிக்கிறேன்னு சத்தியம் பண்ணியவன்
மைதிலிக்கு ரோசாப்பூ தந்தான்னு
தெரிஞ்சதுல ரோசா புடிக்கலை...
Wednesday, May 5, 2010
ஊனாகி உயிராகி மழையாகிறான்..
உன் அறிவிப்பை
கட்டியம் கூறும்
பெருங்காற்று
என் திசையுடன்
திரும்பி போகும்!
பின்னே
காதலன் வருவதையும்
காதல் நுகர்வையும்
அறியாதவளா நான்?
சில சமயம்
துளித்துளியாய்!
பல நேரம்
பேரிடியாய்!
சட் சட் சட்
ராகத்தோடு,
இல்லையெனில்
தென்றலின் சாரலோடு!
பொதுவாக ஊருக்கும்
தனிமையில் எனக்கும்
காதலைச் சொல்கிறாய்!
மழை கண்ட எனக்கு
மனம் சொல்ல தெரியவில்லை.
முதலில்
ஒரு முத்தம்..
அடுத்ததாய்
ஆரத் தழுவுகிறாய்!
சங்கமிக்கும்
பொழுதுகளில்
கட்டவிழ்க்கப்படுகிறது
என் வெட்கங்கள்
அக்கம் பக்கம் அறியாமல்!
என் ஏக்கத்தை
தணிக்கவே
அடிக்கடி வருகிறாய்
மழையாகி!
அது ஒரு
ஆடை நனைந்த பொழுது!
உன்னைப் பருகி
நீ என்னைத் தழுவி!
உயிரும் உணர்வும்
கூத்தாடுகையில்
விடை பெறுகிறாய்
வானம் தெளிந்ததென!
இன்று பெய்கிற
மழை
என்றோ பெய்த
மழையின் மிச்சமென
குதுகலிக்கிறேன் நான்!
''கோடை மழை
சூடு கிளப்பும்''
என்கிறாள் அம்மா!
காதல் வேறென்ன
செய்யும்-
மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து!
கட்டியம் கூறும்
பெருங்காற்று
என் திசையுடன்
திரும்பி போகும்!
பின்னே
காதலன் வருவதையும்
காதல் நுகர்வையும்
அறியாதவளா நான்?
சில சமயம்
துளித்துளியாய்!
பல நேரம்
பேரிடியாய்!
சட் சட் சட்
ராகத்தோடு,
இல்லையெனில்
தென்றலின் சாரலோடு!
பொதுவாக ஊருக்கும்
தனிமையில் எனக்கும்
காதலைச் சொல்கிறாய்!
மழை கண்ட எனக்கு
மனம் சொல்ல தெரியவில்லை.
முதலில்
ஒரு முத்தம்..
அடுத்ததாய்
ஆரத் தழுவுகிறாய்!
சங்கமிக்கும்
பொழுதுகளில்
கட்டவிழ்க்கப்படுகிறது
என் வெட்கங்கள்
அக்கம் பக்கம் அறியாமல்!
என் ஏக்கத்தை
தணிக்கவே
அடிக்கடி வருகிறாய்
மழையாகி!
அது ஒரு
ஆடை நனைந்த பொழுது!
உன்னைப் பருகி
நீ என்னைத் தழுவி!
உயிரும் உணர்வும்
கூத்தாடுகையில்
விடை பெறுகிறாய்
வானம் தெளிந்ததென!
இன்று பெய்கிற
மழை
என்றோ பெய்த
மழையின் மிச்சமென
குதுகலிக்கிறேன் நான்!
''கோடை மழை
சூடு கிளப்பும்''
என்கிறாள் அம்மா!
காதல் வேறென்ன
செய்யும்-
மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து!
Friday, March 12, 2010
ஏமாற்றுக்கார கடவுள்..
பொழுது ஒன்று
போகா நேரத்தில்
இமையிரண்டும் மூடி
இருகை கோர்த்த
ஒரு அசாதாரண நேரத்தில்
வரம் தர வந்தான்
கடவுள் என்பவன்..
கூப்பிய கைகளுக்கு
பரிசு தருவது
அவன் பரம்பரை
பழக்கமாம்!
இஷ்டமானது
கூறு என்றதில்
பட்டியலிட்டது மனது!
ஊர் சுற்ற...
செலவுக்கு பணம் தர..
அழும் போது
ஆறுதல் சொல்ல..
என் பாட்டுக்கு
தலையாட்டி பொம்மையாய்...
இரவு நேர காவலாளியாய்..
அவ்வப்போது
எனக்கு கட்டளையிட்டு...
என் கேள்விகளுக்கு
பதில் சொல்லி
நான் செல்லம் கொஞ்சவும்..
சோர்ந்த நேரம்
பணியாளாய்...
முக்கியமாய்
நான் விளையாட
பொம்மையுமாய்...
எதாவது தா!
என்றேன் கடவுளிடம்!
உடனே அனுப்பி வைத்தான்
கணவன் என்றோருவனை!
எல்லாம் சரி..
இந்த டம்மி பீஸ்க்கு
முப்பது பவுனும்
ஐந்து லட்சமும்
கட்டணமாய் வாங்கியதுதான்
கடவுள் செய்த மோசடி!
போகா நேரத்தில்
இமையிரண்டும் மூடி
இருகை கோர்த்த
ஒரு அசாதாரண நேரத்தில்
வரம் தர வந்தான்
கடவுள் என்பவன்..
கூப்பிய கைகளுக்கு
பரிசு தருவது
அவன் பரம்பரை
பழக்கமாம்!
இஷ்டமானது
கூறு என்றதில்
பட்டியலிட்டது மனது!
ஊர் சுற்ற...
செலவுக்கு பணம் தர..
அழும் போது
ஆறுதல் சொல்ல..
என் பாட்டுக்கு
தலையாட்டி பொம்மையாய்...
இரவு நேர காவலாளியாய்..
அவ்வப்போது
எனக்கு கட்டளையிட்டு...
என் கேள்விகளுக்கு
பதில் சொல்லி
நான் செல்லம் கொஞ்சவும்..
சோர்ந்த நேரம்
பணியாளாய்...
முக்கியமாய்
நான் விளையாட
பொம்மையுமாய்...
எதாவது தா!
என்றேன் கடவுளிடம்!
உடனே அனுப்பி வைத்தான்
கணவன் என்றோருவனை!
எல்லாம் சரி..
இந்த டம்மி பீஸ்க்கு
முப்பது பவுனும்
ஐந்து லட்சமும்
கட்டணமாய் வாங்கியதுதான்
கடவுள் செய்த மோசடி!
Subscribe to:
Posts (Atom)








